web log free
March 14, 2026

ஜனாதிபதி பொது மன்னிப்பு இரத்து-துமிந்தவுக்கு மரண தண்டனை உறுதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் சட்டப்பூர்வமானது அல்ல என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இரத்துச் செய்ய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற குழு மேலும் உத்தரவிட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டவிரோதமானது என்பதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை செய்தபோதே உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வா உட்பட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனை நிறைவேற்றப்படும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd