web log free
July 02, 2025

பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடக்கும் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டமாக மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

பொருளாதார நீதியை அடைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்கு எம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்ப்பதன் மூலம் அரசாங்கம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd