web log free
September 08, 2025

ரணிலுக்கே அமோக ஆதரவு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதிக்கே ஆதரவளிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரின் கருத்து என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நியமிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை எனவும் அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd