web log free
November 11, 2025

வைத்தியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பில்

நாளை (24) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக தெரிவித்ததை போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவு 35,000 ரூபாவை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இந்த புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ சங்கம் மேற்கொள்ளவுள்ளது. 

ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோது சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று சதி செய்து இம்மாத சம்பளத்தில் கொடுப்பனவை வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் டொக்டர் ஹரித அலுத் கே தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd