web log free
June 21, 2026

கொலைக்கு ரதன தேரர் பொறுப்பு

அத்துரலி ரதன தேரரிடமிருந்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக படுகொலை செய்யப்பட்ட அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா தம்மிடம் தெரிவித்ததாக வணக்கத்துக்குரிய வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பில் ரதன தேரர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும், இந்த சம்பவத்திற்கு ரதன தேரரே பொறுப்பு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd