web log free
September 01, 2025

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி

கட்டுநாயக்க அதிவேக வீதியின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் வீதி பாதுகாப்பு வேலியிலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இராஜாங்க அமைச்சரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd