web log free
January 23, 2026

இலங்கையில் மரணமடைந்த இசை பிரபலம்

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.

எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இசைக்கச்சேரி நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நிலை காரணமாக இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் இளையராஜா அவர்களின் மகள் பவதாரணி இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இலங்கையில் சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே சிகிச்சை பலனின்றி அவர் இறைவனடி சேர்ந்துள்ளதால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அல்லாது ஒட்டுமொத்த உலக தமிழ் பேசும் மக்களும் இளையராஜாவின் அனைத்து ரசிகர்களும் மிக வேதனையுடன் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd