web log free
April 22, 2025

பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவுறுத்தபட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

அரசியலமைப்பின் 70 (1) ஏற்பாட்டுக்கு அமைய, இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்காக அறிவிப்பொன்றின் ஊடாக பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால், அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு, பாராளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான குழு உள்ளிட்ட விசேட குழுக்களின் பதவிக் காலமும் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்படுவர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd