web log free
September 20, 2024

துறைமுகத்தில் 20000 புதிய வேலைவாய்ப்பு

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு துறைமுக ஜெட்டியின் பணிகளையும் அதானி நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாகவும், 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஜெட்டி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பணிகள் நிறைவடைந்த பின்னர், துறைமுகத்திலேயே சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அது தொடர்பாக சுமார் 15,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார் துறை மூலம் அதிக அளவில் உருவாக்கப்படும் என்றும் கூறினார். 

குறிப்பாக, துறைமுக அதிகாரசபை கடந்த வருடம் 90 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதிலிருந்து ஊழியர் சம்பளம், அரச வரிகள் மற்றும் செயற்பாடுகள் என சகல செலவுகளையும் தவிர்த்து 23 பில்லியன் ரூபா அல்லது 2300 கோடி நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறையினூடாக தொழில் உருவாக்கம் அடையும் போது பணியாளர்கள் அதிகளவு பயனடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.