web log free
April 22, 2025

வெற்றிலை கூட்டணி அறிமுகத்தில் இழுபறி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கான இழுபறி நிலையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது அந்த பதவிக்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், முன்னாள் பிரதி அமைச்சர் திலங்க சுமதிபாலவுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோடு நீதிமன்றில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலைமையால், இருவரிடமும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும் குழுவில் உள்ள எவருக்கும் அந்த பதவி வழங்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd