web log free
September 20, 2024

மாவனெல்லையில் 30 கடைகள் எரிந்து நாசம்

மாவனல்லை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடைகளில் நேற்றிரவு (28) தீ பரவியுள்ளது.

அதன்படி சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.