web log free
September 08, 2024

வெற்றுக் கையுடன் வந்தாலும் பிரச்சினைகளை தீர்ப்பேன்

1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை தான் தியானம் செய்ததாக வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதனால் தனக்கு ஞாபக சக்தி அதிகம் என்று கூறினார்.

கணனி, கால்குலேட்டர் அல்லது குறிப்புகள் எதுவுமின்றி தான் கூட்டங்களுக்குச் சென்று எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகளை வழங்குவதாகவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எந்த அமைச்சு குறித்தும் யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியையும் கேட்கலாம் என்று கூறினார்.