web log free
August 03, 2025

சிக்கலில் சஜித்! இது எங்கே சென்று முடியுமோ

இந்த நாட்களில் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் புதியவர்கள் இணைவதற்கு அக்கட்சியின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால் அரசியல் சபை குழப்பமாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில எம்.பி.க்கள் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்து வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஏனைய கட்சிகளின் எம்.பி.க்கள் வருவதால் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தமது மாவட்டங்களில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சில எம்.பி.க்கள் கட்சியை விட்டு விலகவும் முடிவு செய்து வருகின்றனர்.

செயற்குழு உடனடியாகக் கூடி விவாதிக்க வேண்டும் என எம்.பி.க்கள் குழு ஒன்று கட்சியின் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd