web log free
September 08, 2024

பெலியத்த கொலை துரத்திச் சென்ற பொலிஸார், தப்பி ஓடிய சந்தேகநபர்

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பயணித்த காரை தங்காலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று துரத்திச் சென்ற போது, சந்தேக நபர் காரை தும்மலசூரிய புறநகர் பகுதியிலுள்ள துந்தோட்ட பாலத்திற்கு அருகில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகநபர் இருந்த போது தங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்ய முற்பட்ட போது காரில் இருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க முடியாத நிலையில் காரை துந்தோட்டைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கார் தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஏற்கனவே தும்மலசூரிய பொலிஸாரின் ஆதரவுடன் தங்காலை பொலிஸ் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.