web log free
June 14, 2025

சிறிகொத்த சென்று ஜனாதிபதி கூறிய அறிவுரை

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் கிராமம் தோறும் சென்று கட்சியை மேம்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருடம் தேர்தல் வருடம் எனவும் அதனை புரிந்து கொண்டு கட்சியினருடன் சமாளித்துக்கொள்ளுங்கள் எனவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd