web log free
September 05, 2025

பொன்சேகாவிற்கு சஜித் கட்சியில் தடை

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கட்சியின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் கொள்கைகளுக்கு கேடு விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பொன்சேகா தனது பதவியை பறிக்க போவதாகக் கூறி கட்சியின் தலைமை, பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் பல தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடை உத்தரவும் பெற்றுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி குழுவின் கூட்டம் நேற்று பிற்பகல் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றதாகவும் அதில் பொன்சேகா சம்பந்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd