web log free
August 01, 2025

இன்று காலை ஒருவர் சுட்டுக் கொலை

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்பிட்டிவல சந்திக்கு அருகில் உள்ள கடையொன்றில் இன்று (21) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெட்டியாராச்சி சுஜித் என்ற 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 07.15 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd