web log free
September 03, 2025

விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெறும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

புதிய மற்றும் பழைய பாடவிதானங்களின் அட்டவணை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், உயர்தர பரீட்சை ஓகஸ்ட் ஐந்தாம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறும்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 4ஆம் திகதி நடைபெறும் என்றம் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd