web log free
April 22, 2025

இம்மாதம் விலை திருத்தம் இல்லை

தற்போதுள்ள எரிபொருள் விலையை மாற்றியமைக்காமல் மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் நேற்று (29) நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd