web log free
June 13, 2025

முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் கைது

இந்த நாட்டில் தேடப்பட்டு வரும் மேலும் பல குற்றவாளிகள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்றும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd