web log free
September 20, 2024

நீரை சிக்கனமாக பயன்படுத்தினால் சிறப்பு

வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பமான காலநிலை நீடிக்கும் எனவே கவனமாக இருக்குமாறு திணைக்களம் மக்களுக்கு வலியுறுத்துகிறது.

இதற்கு மேலதிகமாக, விலங்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இந்த காலநிலையை கருத்தில் கொண்டு கறவை மாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தி குறைவதை தடுக்க முடியும் எனவும் அதன் மூலம் விலங்குகளின் நீர்ச்சத்து குறைவை குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.