web log free
April 22, 2025

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதாக அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

ஒருவேளை அநுர திஸாநாயக்கவுக்கு உதவி செய்து பிரதமர் பதவியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும், விக்கிரமசிங்க இவ்வாறான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பழகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd