web log free
April 22, 2025

கைவிரித்த தொழிற்சங்க தலைவர்கள் பின்னால் ஓடும் மொட்டு தலைமை

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க தலைவர்களை மீண்டும் இணைப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அண்மையில் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய கூட்டணியுடன் கட்சியைச் சுற்றியுள்ள பல தொழிற்சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்கள் இணைந்து செயற்படுகின்றன.

இதன் காரணமாக பொஹொட்டுவ தொழிற்சங்க இயக்கம் கடுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையை எப்படியாவது தடுக்கும் நோக்கில் நெலும் மாவத்தை கட்சி அலுவலகம் இந்த நாட்களில் செயற்படுவதுடன் புதிய கூட்டணியில் இணைந்துள்ள தொழிற்சங்க தலைவர்களுக்கு மீண்டும் வருமாறு கோரி நாளொன்றுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த புதிய கூட்டணி முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநாத், மொட்டுவின் அரசியலை இனி ஒருபோதும் கையாளப்போவதில்லை என தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd