web log free
April 22, 2025

சுதந்திர கட்சி பதில் பொதுச் செயலாளர் பொலிஸில் செய்துள்ள முறைப்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால நேற்று மாலை மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.  

கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன கோப்புகளில் அக்கட்சியின் நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த முறைப்பாடு தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd