web log free
May 08, 2024

அதிகாலையில் பயங்கரம், இருவர் சுட்டுக் கொலை

மொரகஹஹேன, மில்லவ பகுதியில்  உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.