web log free
February 12, 2026

கஞ்சா அடித்தால் வலிமையும் இன் வளர்ச்சியும் ஏற்படும் - பிரபல தேரர் கருத்து

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க நம்புகின்றேன் என்றார்.

கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில் மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியும் ஏற்படுகிறது என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd