web log free
September 18, 2025

தேடப்படும் குற்றவாளியின் தந்தை சுட்டுக் கொலை

அஹுங்கல்ல - போகஹபிட்டிய பிரசேத்தில் நேற்றிரவு (08) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

54 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாயில் இருக்கும் பாதாள உலகக் குழு முக்கியஸ்தர் ஒருவரின் தந்தையே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd