web log free
February 15, 2026

மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் களமிறங்குவார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டுமின்றி எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வைக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிற்காகவும் தனித்தனியாகவும் எவருடனும் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd