web log free
September 08, 2024

பணமில்லை என்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது

பணமில்லை என்று கூறி உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டது போன்று ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பாஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்று (10ம் திகதி)  தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலக்கெடுவிற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கூட அரசாங்கம் பலகோடி நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அதனால் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்பதற்கான காரணமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.