web log free
September 08, 2024

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை பஸ் சாரதி

15 வயதுடைய பாடசாலை மாணவியை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று காரில் பாலியல் வன்கொடுமை செய்த 32 வயதுடைய பாடசாலை மாணவர் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதி குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் மாணவர் பேருந்தின் உரிமையாளர் எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இம்மாணவி பாடசாலைக்கு பேருந்தில் வழமையாகச் செல்வதாகவும் சந்தேகத்தின் பேரில் கைதான டசாரதி இச்சிறு மாணவியை ஏமாற்றி அவளுடன் காதல் உறவைப் பேணி வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.