web log free
January 01, 2026

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பான உண்மை நிலை

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல பொஹொட்டுவ எம்.பி.க்கள் குழுவொன்று தயாராகி வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக வலைதளங்கள் மூலம் தேவையற்ற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

போலியான செய்திகளால் பொஹொட்டுவ கட்சி உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளதாகவும், பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி செயற்படமாட்டார் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd