web log free
September 16, 2025

புதிய கூட்டணி மேடைக்கு வரத் தயாராகும் எஸ்ஜேபி எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஏனைய கட்சிகளுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை மாத நடு வாரத்திற்குள் பணிகளை முடிக்க நேற்று கூடிய கூட்டணியின் நிர்வாகிகள் குழு முடிவு செய்தது.

இந்த கூட்டணியில் சேர்வது குறித்து ஏற்கனவே 15 எஸ்ஜேபி உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளதாகவும் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள ஏறக்குறைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd