web log free
January 23, 2026

ஜுன் 6ஆம் திகதி நாட்டில் அரசியல் விவாதப் போர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை ஜூன் 06ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளது.

நளின் பண்டாரவினால் நேற்றைய தினம் (19) அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கடிதம் தொடர்பில் நளின் பண்டார நேற்று (19) தேசிய மக்கள் சக்திக்கு அறிவித்தார், இரு தலைவர்களுக்குமிடையிலான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கும் 7ஆம் திகதிக்கும் இடையில் நடத்துவதற்குத் தயார் என்று கூறினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd