web log free
February 25, 2026

சஜித் அணிக்கு தலையிடி ஏற்படுத்தும் பொன்சேகாவின் முடிவு

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்வரும் ஜூன் மாதம் சரத் பொன்சேகா வெளியிடவுள்ளார்.

சரத் பொன்சேகா எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையாமல் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சிகளின் எம்.பி.க்கள் குழுவும் அவருடன் இணைந்து கொள்ள தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd