web log free
January 01, 2026

இன்றும் மோசமான வானிலை

இன்று பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (25ம் திகதி) அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் அருகே புயலாக உருவாகலாம்.

இது இன்று இரவு 11.30 மணிக்கு மேலும் சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யக்கூடும்.

எவ்வாறாயினும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd