web log free
September 08, 2024

சஜித் கட்சி செயலாளருக்கு ஐதேக உறுப்புரிமை

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் கட்சி உறுப்புரிமை 2020 இல் இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அவரது கட்சி செயற்பாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.