web log free
January 30, 2026

அநுர அணியை வலுப்படுத்தும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

மஹரகமவில் இன்று நடைபெறும் கட்சியின் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாநாட்டில் அவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவும் தேசிய மக்கள் சக்தியில் இணைந்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd