web log free
November 18, 2025

நாட்டின் வெற்றியா தனிநபர் வெற்றியா என மக்கள் தீர்மானிக்கட்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தனிப்பட்ட வெற்றி தோல்விகளை விட நாட்டின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (11) பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கொள்கை சீர்திருத்த உரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் மக்கள் திருப்தியடைந்தால், அந்த முறையை முன்னெடுத்துச் செல்லலாம், இல்லையெனில் சரிந்த பொருளாதாரம் கொண்ட நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக, மருந்துகளை விநியோகிக்க முடியாமல் மக்கள் வரிசையில் நிற்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd