web log free
March 26, 2026

200 கோடி பெறுமதி ஹெரோயினுடன் மீனவர்கள் கைது

சர்வதேச கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்நாள் மீன்பிடிக் கப்பலின் ஓட்டில் நான்கு உரப் பொதிகளில் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உர மூட்டைகளில் 100 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் போதைப்பொருள் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல நாள் மீன்பிடி படகு தற்போது காலி துறைமுகத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (14) விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd