web log free
June 07, 2025

ரணிலுக்கு ஆதரவான பிரச்சாரம் மாத்தறையில் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் நடத்தப்படும் பேரணியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இணைந்துள்ளனர்.

இதன்படி, அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு ஆதரவான மாத்தறை மாவட்ட மக்கள் மாத்திரமே இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd