web log free
April 02, 2026

மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (20) முதல் மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, மேற்கு, சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்த மழையுடனான காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை (22) வரை தொடரலாம் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd