web log free
September 17, 2025

மஹிந்த குறித்து வெளிவந்த தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி தயாராக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவ பரிந்துரைகள் காரணமாக முழுநேர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் உள்ள அசௌகரியத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் தமது கட்சியின் வெற்றிக்காக அவர் பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd