web log free
June 07, 2025

மாணவர்களின் கல்விக்கு நாளையும் தடை

ஆசிரியர் அதிபர் சங்கத்தினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

 நடத்தப்பட்ட போராட்டம் பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட போதிலும் தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக நேற்று பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த (01) அன்று பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd