web log free
September 16, 2024

க்ளப் வசந்த சுட்டுக் கொலை

அத்துருகிரிய, ஒருவல சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 'கிளப் வசந்த' என்ற நபர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பாடகர் கே.சுஜீவாவும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.