web log free
April 21, 2025

சஜித்தின் உயிருக்கு ஆபத்து

அமெரிக்க எதிர்க்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடப்பதாக சமகி ஜன பலவேகய தெரிவித்துள்ளது.

இது ஒரு போதும் அங்கீகரிக்க முடியாத சோகமான நிலை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையிலும் அரசியல் கட்சிகள் தமது இலக்குகளை அடைய முடியாத போது எதிரணி வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகளை முன்னெடுத்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக நாட்டின் ஆட்சியை ஆயுதங்களால் நடத்தாமல், மக்களின் கருத்தைக் கேட்கும் தேர்தல் மூலம் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd