web log free
February 25, 2026

22ஆம் திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் '6 வருடங்களுக்கு மேல்' என்ற சொற் தொடருக்கு பதிலாக '5 ஆண்டுகளுக்கு மேல்' என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நேற்று (18) அறிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியினால் இன்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd