web log free
September 16, 2025

கஞ்சிபானி இம்ரானை கைது செய்ய நடவடிக்கை

பிரான்சில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் கஞ்சிபானி இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுமாறு பிரான்ஸ் தூதுவருக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அறிவித்துள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானுக்கு எதிராக சர்வதேச காவல்துறை ஏற்கனவே சிவப்பு பிடியாணை பிறப்பித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

கஞ்சிபானி இம்ரானைத் தவிர, பிரான்சில் பதுங்கியிருக்கும் குடு அஞ்சு, ரொட்டம்பே அமில உள்ளிட்ட பல பாதாள உலக குழுவை இலங்கைக்குக் கொண்டுவரும் வேலைத்திட்டம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன தலையிட்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் விரிவான கலந்துரையாடலை நடத்தி அதன் மூலம் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு அறிவிக்கும்.

கிளப் வசந்தவை கொடூரமாக சுட்டுக் கொன்றதாக கஞ்சிபனி இம்ரான் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd