web log free
March 25, 2026

ஜீவனை கைது செய்ய உத்தரவு

நுவரெலியா - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரின் ஆதரவாளர்கள் அத்துமீறி உள் நுழைந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினரால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட புகாருக்கமைய அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd