web log free
April 21, 2025

பொலிஸ் மா அதிபர் பதவி யாருக்கு?

தேசபந்து தென்னகோன் தொடர்பில் நேற்று (24ஆம் திகதி) காலை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் பொலிஸ் மா அதிபர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.

அதன்படி, அந்த பதவிக்கு உடனடியாக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய, சஞ்சீவ தர்மரத்ன, சஜீவ மெதவத்த, தமிந்த ஸ்ரீ ராஜித, கித்சிறி ஜயலத், ரன்மல் கொடித்துவக்கு மற்றும் அஜித் ரோஹன ஆகியோர் பொலிஸ் திணைக்களத்தில் இதற்கு தகுதியான நபர்கள் பட்டியலில் உள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd