web log free
October 18, 2024

புலனாய்வு தகவல்களை வெளியிட அனுமதிக்க போவதில்லை

அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகளை நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் வரவழைத்து புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.